Monday, October 19, 2009

ஊரார் கவிதை

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

All I Wanted Was SomeOne To Care For Me
All I Wanted Was SomeOne Who Would Be There For Me
All I Ever Wanted Was SomeOne Who Would Be True
All I Ever Wanted Was SomeOne like You

In my life I learned how 2 love,
how 2 smile,
how 2 B happy,
how 2 B strong,
But I couldn’t learn how not 2 miss U…

*****************************
நீ கருவுற்றிருந்ததால் ஒருவருக்குத்தான் அன்னை கருணைஉற்றால் அனைவருக்கும் அன்னை

*****************************
பக்கத் தில் இருந்தும்
பார்க்காமல் இருக்கிறாய்

கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்

பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்

என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்

என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்

மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?

வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து... 

1 comment:

  1. இதுல ஒரு கவிதை என்னுடையது.... அதுவும் பதிப்புரிமை உடையது. :)

    ReplyDelete

Followers